பிட்காயின் விலை திடீரென அதிகரிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றிக்குப் பிறகு, பிட்காயின் எனும் இணைய நாணயம் (கிரிப்டோகரன்சி) 90,000 அமெரிக்க டாலர்களைத் தாண்டி விற்பனையாகி வருகிறது.

அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவை உலகின் ‘கிரிப்டோ தலைநகராக’ உருவாக்குவதாக உறுதியளித்திருந்தார்.

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயினின் விலை, இந்த வருடம் 80%-க்கு மேல் உயர்ந்துள்ளது.

பிட்காயின் மட்டுமின்றி இதரக் கிரிப்டோகரன்சியான டோஜ்காயினும் (Dogecoin) டிரம்பின் ஆதரவாளரான ஈலோன் மஸ்க் ஊக்குவித்ததால் அபரிவிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு ஜோ பைடன் தலைமையிலான அரசு, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தலைவராக கேரி ஜென்ஸ்லரை நியமித்திருந்தது, இவர் கிரிப்டோ சந்தையின் பின்னணியைத் தகர்க்க வேலை செய்தவர்.

ஸ்டோன்எக்ஸ் நிதி நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் மேட் சிம்ப்சன், டிரம்ப் தலைமையிலான அரசு கிரிப்டோகரன்சி மீதான கட்டுப்பாட்டை மாற்றினால், பிட்காயினின் விலை 1 லட்சம் அமெரிக்க டாலர்களைத் தாண்டக் கூடும் எனக் கூறினார். (இந்திய மதிப்பில் சுமார் ரூ.85 லட்சம்)